45 நிமிட துரத்தலுக்கு பின் தம்பதியரை கைது செய்த போலீசார்

கப்பாளா பத்தாஸ் பெர்மாத்தாங் டோல் பிளாசாவில் தொடங்கிய சம்பவத்தில் 45 நிமிட துரத்தலுக்குப் பிறகு காரில் தப்பிக்க முயன்ற தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மாலை 6.30 மணியளவில், புரோட்டான் வீரா காரில் பயணம் செய்த 31 மற்றும் 33 வயதுடையவர்  சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததாக் ரோந்து போலீசார் அவர்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டபோது தப்பிக்க முயன்றதாக செபராங் பெராய் வடக்கு போலீஸ் தலைவர் நூர்சைனி முகமட் நூர் தெரிவித்தார் .

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த நபரால் இயக்கப்படும் காரை இரண்டு முறை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். ஆனால் ஓட்டுநர் மறுத்துவிட்டார். காரை நிறுத்துவதற்கு பதிலாக ஆக்ரோஷமாக நடந்து பல போக்குவரத்து விளக்குகளை மீறி வாகனத்தை வேகப்படுத்தினார்.

தாமான் ஹாஜி அப்துல்லா பாஹிமில் தம்பதியினர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், பெர்மாத்தாங் புலு, பெர்மாத்தாங் சிரி, பாஜாக் ஃசாங், ஜாலான் பேராக், ஜாலான் மஜு, கம்போங் பயா உள்ளிட்ட பல பகுதிகளிலும் காவல்துறையினர் காரைத் துரத்தினர் என்று பெர்னாமா இன்று மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

தாமான் ஹாஜி அப்துல்லா பாஹிம் சந்திப்புக்கு வந்ததும், இரண்டு ரோந்து கார்களின் (எம்.பி.வி) உதவியுடன் காவல்துறையினர் தம்பதியினர் பயணித்த  காரை தடுத்து நிறுத்த முடிந்தது. சந்தேகநபர் எம்.பி.வி.யையும் அடிக்க முயன்றார், இதனால் முன்புறம் சேதம் ஏற்பட்டது.

ஆரம்ப போலீஸ் விசாரணையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றதற்காகவும் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததால் தம்பதி தப்பி ஓடியதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்று நூர்செய்னி கூறினார்.

இந்த நபர் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 18 முந்தைய பதிவுகளையும், ஆபத்தான மருந்துகள் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் (எல்.எல்.பி.கே) கீழ் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளார் அதே நேரத்தில் அவரது காதலி போதைப்பொருள் தொடர்பான மூன்று பதிவுகளை வைத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here