நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்; நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக இருங்கள் என்று அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்.

சென்னை , ஜூலை 14 :

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு ரோல்ஸ்ராய்ஸ் சொகுசுக் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி, அவர் தாக்கல் செய்திருந்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. மேலும் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி  செய்த தனது ரோல்ஸ்ராய்ஸ் சொகுசுக் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரது செயலையும் கடுமையாக சாடியுள்ளது. மேலும் ஒரு லட்சம் அபராதத் தொகையை தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதிக்காக கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here