யாரும் எடுத்திருந்தா கொடுத்திடுங்கப்பா!- பாவம் ஷோபனா

பிரபல நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

மகாநதி படத்தின் மூலம் பிரபலமானவர் மகாநதி ஷோபனா. அதன் பிறகு தளபதி, சிவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞராக மாறி கச்சேரிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள குல்மகர் அவென்யூவில் நடிகை ஷோபனாவின் வீடு உள்ளது. வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த செல்போன் திருடு போனது.

இதுகுறித்து நடிகை ஷோபனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். வீட்டில் இருந்த செல்போன் காணாமல் போனதால், அதை திட்டமிட்டு யாராவது திருடி இருக்கலாம் என அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here