பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புக்கு கூட்டணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நிபந்தனைக்குப்பட்டது என்று பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் கூறினார். அது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்த அமைச்சர்களையும் அமைச்சரவையில் சேர்க்கக்கூடாது என்று முஹிடின் கூறினார்.
மாமன்னர் பிரதமராக நியமிக்கும் நபர் (இஸ்மாயில்) தனது அமைச்சரவை அமைச்சர்கள் நேர்மையுடன், பொறுப்புடன், நீதிமன்றத்தில் எந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.