கார் மோதி 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

ஈப்போ: நேற்று (ஆகஸ்டு 21) மாலை இங்கிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்தியவானின் கம்போங் அச்சேவில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக, கார் மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மூவர் இறந்தனர்.

சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் முகமட் ஜக்கி ஜைனலை தொடர்பு கொண்டபோது, தமக்கு இவ்விபத்து தொடர்பாக மாலை 5.28 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகவும் உடனே சம்பவ இடத்திற்கு சித்தியவான் மற்றும் ஶ்ரீ மஞ்சோங் தீயணைப்பு மீட்புக்குழுவினர் அவ்விடத்திற்கு சென்றதாகவும் கூறினார்.

“இந்த விபத்தில் புரோட்டோன் ப்ரீவ் கார் ஒன்று எதிர்த் திசையில் இருந்து வந்த பல மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதாக நம்பப்படுகிறது.

“சுகாதார பணியாளர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மூவரும் இறந்ததை உறுதி செய்த பிறகு, தீயணைப்பு மீட்புக்குழுவினர் சடலங்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்று அவர் கூறினார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக அனைத்து உடல்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மாலை 5.56 மணிக்கு மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய புரோட்டான் ப்ரீவில் பயணம் செய்த ஒரு நபர் காயமடைந்தார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அடையாளம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here