கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற 22 வயது வாலிபர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்தவர், நீரில் மூழ்கி மரணம்

அலோர் ஸ்டார்: ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) லங்காவி அருகே உள்ள புலாவ் லாலாங் கடலில் மூன்று நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவரின் உடல், திங்கட்கிழமை (ஆகஸ்டு 23) கோலா தெமொன்யோங்கில் உள்ள சதுப்புநிலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

கெடா மற்றும் பெர்லிஸ் கடல்சார் இயக்குனர் முகமட் ஜவாவி அப்துல்லா இச்சம்பவம் பற்றி கூறியதாவது, 22 வயதான முகமட் எவாண்டி ஹுஸ்னான் என்பவரது உடல், கறுப்பு நிற பாண்ட் அணிந்த நிலையில் திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அவ்வட்டார மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நான்கு சக்கர வாகனத்தின் உதவியுடன் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.

மேலும் இறந்தவரது சடலம் பிரேதபரிசோதனைக்காக லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அத்தோடு பாதிக்கப்பட்டவரின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டதாக ஜவாவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது மூன்று நண்பர்கள், 18 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் , மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, படகு ஒரு மிதவையில் மோதியதால், அவர்கள் அனைவரும் புலாவ் லாலாங்கிலிருந்து 0.5 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்தனர்.

இருப்பினும், அவரது நண்பர்களில் மூன்று பேர் அங்கிருந்த மீன்பிடி படகினரால் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here