இதுவரை 30,000 க்கும் அதிகமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், அக்டோபர் 19 :

நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலித்தியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,934,377 பேராகும். அதே நேரத்தில் 30,756 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ​​12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உட்பட மொத்த மக்கள்தொகையில் 22.7 விழுக்காட்டினருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19) சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ கோவிட்நவ் போர்ட்டல் மூலம் “77.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளது, மேலும் 70.2 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here