சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 28 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதில் நான்கு பேர் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 30,746 ஆக உள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒற்றை இலக்க இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. சிலாங்கூர் (6), சபா (5), ஜோகூர் (3), கெடா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக் மற்றும் பினாங்கு (தலா 2) மற்றும் கிளந்தான், மலாக்கா, தெரெங்கானு மற்றும் கோலாலம்பூர் (தலா 1). பெர்லிஸ், சரவாக், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
நள்ளிரவு நிலவரப்படி, 60,878 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 428 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 237 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
மேலும் 4,525 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,673,019 ஆக உள்ளது.