சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 23 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது. முந்தைய நாள் இறப்பு 35 ஆக இருந்தது.
நான்கு பேர் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,392 ஆக உள்ளது.
சமீபத்திய இறப்பு பட்டியலில் ஜோகூர் மற்றும் தெரெங்கானுவில் 4 பேர், பேராக் (3), கிளந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் (தலா 2) மற்றும் கெடா,மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சபா (தலா 1) ஆகிய இடங்களிலும் உள்ளன. பெர்லிஸ், பினாங்கு, சரவாக், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
நள்ளிரவு நிலவரப்படி, 42,357 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 302 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளன. அவர்களில் 169 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
மேலும் 3,434 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,746,833 ஆக உள்ளது.