ஜெரான்துட், டிசம்பர் 31 :
குவாந்தான், சுங்கை பெலாட், ஸ்ரீ டாமாய் பாலத்தில் டிசம்பர் 18 முதல் காணாமல் போன ஒருவரின் உடல் நேற்று இரவு 8.10 மணியளவில் ஆற்றங்கரையில் மிதக்க கண்டெடுக்கப்பட்டது.
28 வயதான முகமட் ஃபிர்தௌஸ் சுபியார்டியின் என்ற ஆடவனின் உடல், காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் கடைசி இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குநரான இஸ்மாயில் அப்துல் கானி இதுபற்றிக் கூறுகையில், சுங்கை பெலாட் பாலத்தில் இருந்து 7.20 மணிக்கு சடலம் ஒன்று மிதப்பதைப் பார்த்ததாகவும் பொதுமக்களால் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனது துறைக்கு நேற்று மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.
அதைத் தொடர்ந்து, தாமான் தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் உயிரிழந்தவரின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிசம்பர் 18 அன்று, ஜெயா காடிங்கைச் சேர்ந்த முகமட் ஃபிர்தௌஸ், குவாந்தனில் உள்ள கம்போங் ஸ்ரீ டாமாயில் உள்ள சுங்கை பெலாட் பாலத்தில் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.