பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 428,008 பேருக்கு கோவிட்-19 புதிய தொற்றுக்கள் பதிவு

பாரீஸ், ஜனவரி 27:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கோவிட்-19 வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதன்படி பிரான்ஸில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.7 மில்லியனைக் கடந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 428,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 17,730,556 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 258 பேர் உயிரிழந்ததால், அங்கு கோவிட்-19 தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 129,747 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸில் இதுவரை கோவிட்-19 தொற்றில் இருந்து 11,053,749 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,547,060 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here