ஆப்கானிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு ; 30-க்கும் மேற்பட்டோர் பலி

காபூல், ஆகஸ்ட் 18 :

ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று வழக்கமான தொழுகைக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here