பிரபாகரனுக்கு எதிராக மஇகா இளைஞர் பிரிவு தலைவர் போலீஸ் புகார்

கோலாலம்பூர், நவம்பர் 11:

கட்சி தாவினால் மஇகா 10 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வழங்க முன்வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, இதுவரை எந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்காத பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டரசுப் பிரதேச மஇகா இளைஞரணித் தலைவர் கே. சசி கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான பிரபாகரனுக்கு எதிராகவும் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பத்து மஇகா இளைஞரணித் தலைவரான அவர், பிரபாகரன் கூறியது போல் ஊழல் நடவடிக்கைகள் குறித்து அவர் என் புகார் அளிக்கவில்லை என்பது குறித்து குறித்து எம்ஏசிசி உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இன்று, மஇகா பத்து இளைஞரணித் தலைவர் என்ற முறையில், மஇகாவிற்கு கட்சி தாவவும், மஇகாவில் இணைந்து கொள்வதற்கும் பிரபாகரனுக்கு மஇகா 10 மில்லியன் ரிங்கிட் வழங்க முன்வந்ததாக கூறியதற்காக, பிரபாகரன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here