தாய்லாந்தில் வீட்டில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு – 3 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here