புதிய சட்டத்தை கொண்டு வருவதாக கூறியதால் 1 லட்சம் பேர் கூடி போராட்டம்

இஸ்ரேலில் நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கு இடையிலான அதிகாரங்களில் சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார்.

இது நாட்டின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என கூறி அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருப்பினும் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இச்சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் எனினும் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை முழுமையாக கைவிடும்படி மக்கள் அங்கு வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதன்படி நாடு முழுவதும் தொடர்ந்து 24ஆவது வாரமாக சுமார் 150 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் உள்பட சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டு நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here