1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி உள்ளது. அதில் 5 செல்வந்தர்கள் சிக்கி உள்ள நிலையில் தற்போது ஒட்சிசனும் காலியாகி உள்ளது.
இந்த நிலையில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இருந்த கடலின் அடிப்பகுதியில் ஒரு கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்து அவற்றை அடையாளம் காணும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இதுவரை நீர்மூழ்கிக் கப்பலின் உறுதியான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.