பொருட்களை விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ நாம் அனைவரும் பயனீட்டாளர்கள். பயனீட்டாளர் என்ற முறையில் உண்மையில் பல விவகாரங்கள் மீதான உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் மூலம் பொருட்களை வாங்குபவர்களும் பயனீட்டாளர்களே என்பதால், நீங்களும் அதில் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
ஓய்வு நேரத்திற்கு குறித்த நேரத்தை செலவிடுங்கள், 2023ஆம் ஆண்டுக்கான தேசிய பயனீட்டாளர் தினத்தில் கலந்து கொண்டால் உங்கள் சிந்தனையில் தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஐயங்களுக்குத் தீர்வு கிடைக்கும். எனவே, இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை புக்கிட் ஜாலில் பியாஸா பவிலியோன் மண்டபத்தில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான தேசிய பயனீட்டாளர் தினத்தில் நாம் அனைவரும் கலந்து கொண்டு பயனடைவோம்.
நுழைவு இலவசம்! நாம் சிறந்த பயனீட்டாளராக மாறுவோம் !