இஸ்தான்புல்
அல்பேனியாவிற்குத் தப்பிச் சென்ற துருக்கிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான தோடெக்ஸின் நிறுவனர் மற்றும் அவரது மற்ற இரண்டு சகோதரர்களுக்குத் தலா 11,196 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பணமோசடி மற்றும் ஒரு குற்றவியல் அமைப்பை நிறுவியதற்காக டோடெக்ஸ் நிறுவனர் ஃபரூக் ஃபாத்திஹ் ஓசருக்கு 40,562 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஆரம்பத்தில் நீதிமன்றத்தைக் கோரியதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது மற்ற இரண்டு சகோதரர்களான செராப் மற்றும் குவென் ஆகியோருக்கு வியாழன் விசாரணையில் அதே தண்டனை விதிக்கப்பட்டது.
ஓசர் ஏப்ரல் 2021 இல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீட்டாளர் சொத்துக்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஓசர் 250 மில்லியன் லிரா அல்லது RM43.5 மில்லியன் நுகர்வோர் சொத்துக்களை மூன்று ரகசிய கணக்குகளுக்கு மாற்றியதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான பணம் மால்டா வங்கியில் உள்ளது
மூன்று சகோதரர்கள் வாடிக்கையாளருக்கு 356 மில்லியன் லிரா அல்லது RM62 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
துருக்கியில் கிரிப்டோகரன்சி ஏற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு உள்ளூர் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.
லிராவின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து துருக்கியர்கள் கிரிப்டோகரன்சிகளுக்குத் திரும்புவதைக் காணலாம்.
சர்வதேச போலீஸ் கைது வாரண்டின் பேரில் கடந்த ஆண்டு அல்பேனியாவில் ஓசர் கைதுச் செய்யப்பட்டார்
























