லாபுவான்:
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) இரவு இங்குள்ள செபோர் சாகுகிங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் பாடாவ்-பாடாவ் என்ற இடத்தில், சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் Kg Gersik இல் வசிக்கும் அப்தில்லா அபாஸ் (65) என அடையாளம் காணப்பட்டார்.
26 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார், என்றும், விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தற்போது லாபுவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்என்றும் லபுவான் காவல்துறை தலைவர் முகமட் ஹமிசி ஹலிம் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், வெளிச்சம் இல்லாத சாலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
“இருப்பினும், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41 (1) இன் கீழ் போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.