கோலாலம்பூர்:
ஊழலுக்கு எதிராகப் போராடுவோம் என்று குறிக்கொண்டு அவர்களின் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் நடப்பு அரசாங்கம் பாசாங்குத்தனமானது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒற்றுமை அரசாங்கத்தை சையட் சாதிக் சாடினார்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் (BN -பாகன் டத்தோ) ஊழல் வழக்கிலிருந்து விடுவித்தது தொடர்பில், எதிர்க்கட்சி எம்பிக்கள் விவாதிக்க வேண்டும் என செய்த மனு நாடாளுமன்ற சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒற்றுமை அரசாங்கத்திற்கான தனது ஆதரவை மீளப்பெற்றுக் கொண்ட சையத், இன்று எதிர்க்கட்சி வரிசையிலிருந்து குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“2015 ஆம் ஆண்டில், அப்போதைய அரசாங்கமும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று அவர் மேற்கொள்காட்டினார்.





















