மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து நண்பனை சுட்ட ஆடவர் கைது

கெமாமன்:

நேற்று காலை கெர்டேவில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது தோட்டத்தில் உள்ள மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து, அவரது நண்பர் சுட்டது தொடர்பில், துப்பாக்கி சூடு நடத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

காலை 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் , 54 வயதான ஆடவர் வேட்டை துப்பாக்கியின் தோட்டாவால் தாக்கப்பட்டதில் அவரது இடது கையில் காயமடைந்தார் என்று, கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக கெமாமன் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் 69 வயதான சந்தேக நபரிடமிருந்து, காவல்துறையினர் குறித்த துப்பாக்கியை பறிமுதல் செய்ததாகவும், சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபரிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி அல்லது உரிமம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

துப்பாக்கிச் சட்டம் 1990 பிரிவு 8 மற்றும் 37ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here