கூட்டரசு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த BMW கார் ; லாவகமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

சுபாங் ஜெயா:

கூட்டரசு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த BMW 520i காரிலிருந்து அதன் ஓட்டுநர் லாவகமாக இறங்கியதால் உயிர்தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு காலை 9.42 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர், அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு கார் 70 விழுக்காடு தீயில் எரிவதைக் கண்டோம், ஆனால் அதன் ஓட்டுநர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here