பெலாங்காய் இடைத்தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் -தேர்தல் ஆணையம்

பெந்தோங்:

பெலாங்காய் மாநில இடைத்தேர்தலூக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நாளைக் காலை 9 மணி முதல் 10 மணி வரையுள்ள ஒரு மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யலாம் என்று பகாங் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி வரை ஏழு செட் வேட்புமனு பாரங்கள் விற்கப்பட்டுள்ளன, அதாவது தலா மூன்று செட்கள் UMNO மற்றும் Perikatan Nasional (PN) பிரதிநிதிகளால் வாங்கப்பட்டன மற்றும் ஒரு செட் ஒரு அரசார்பற்ற அமைப்பால் வாங்கப்பட்டது என்று அது தெரிவித்துள்ளது.

அம்னோவின் கோட்டையாக கருத்தப்படும் பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் (PN ) கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்த காசிம் சாமாட்டை மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான், காசிமை PN இன் வேட்பாளராக அறிவித்தார், இதற்கு அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

பெலாங்காய் மாநில சட்டமன்றம் மொத்தம் 16,456 வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here