புத்ராஜெயா:
ஹமாஸ் விடுதலைப் போராளிகளின் இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதல்களுக்கு தனது 100 விழுக்காடு ஆதரவைத் தெரிவிப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் இந்த நடவடிக்கைகள் நீண்ட காலமாக பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் எதிரொலி என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் இதை இஸ்ரேல் பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்காது, அவர்களின் தாக்குதல்களால் பழிவாங்கும் என்று அவர் கூறினார்.
“70 ஆண்டுகளில் முதல் முறையாக, பாலஸ்தீன நடவடிக்கைகளின் அழுத்தத்தை இஸ்ரேலியர்கள் உணர்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறை குறித்து தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய உலகத் தலைவர்களில் டாக்டர் மகாதீரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.