கோலாலம்பூர்:
இன்று (அக். 19) காலை 8 மணி நிலவரப்படி, நாட்டின் ஒரு பகுதியில் அதாவது கிள்ளான் பகுதியில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) பதிவாகியுள்ளது.
மலேசியன் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் அடிப்படையில், கிள்ளானில் காற்று மாசுக் குறியீடு 154 API என்ற அளவீடுகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயா மற்றும் பத்து மூடாவின் APIஅளவீடுகள் முறையே காலை 4 மற்றும் காலை 7 மணிக்கு மிதமான தரநிலைக்குக் குறைந்தன.