பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஈப்போ:

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 94 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேராக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் கெரியான் மற்றும் ஹிலிர் பேராக் மாவட்டங்களில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சாங்காட் ஜொங்கில் பிடோர் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், இருப்பினும் அது சாதாரண நீர்மட்டமான 2 மீட்டருடன் ஒப்பிடும் போது, இன்னமும் 4.09 மீற்றர் அளவில் ஆபத்தான மட்டத்தில் இருப்பதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here