கெடாவிலுள்ள இறால் பண்ணைக் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி

சுங்கை பட்டாணி:

கோத்தா கோலா மூடா அருகே கம்போங் சுங்கை எமாஸ் ஹுஜுங்கில் நேற்று (நவ 1) மாலை இரண்டு சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இறால் பண்ணையின் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தனர்.

பலியானவர்கள் 5 வயது முஹமட் ஐதில் அதா முகமட் அலி மற்றும் அவரது உறவினர் 3 வயததான முஹமட் சியாபிக் அம்ஸ்யார் அப்துல் சியாஹித் என அடையாளம் காணப்பட்டனர்.

உயிரிழந்த 5 வயது முஹமட் ஐதிலின் தந்தை, முகமட் அலி அப்துல் ரஹ்மான், 48, குறித்த இறால் பண்ணையில் வேலை செய்கிறார் என்றும், சிறுவன் அடிக்கடி தந்தையுடன் அப்பண்ணைக்கு சென்று வருபவர் என்றும் கூறப்படுகிறது.

“சம்பவத்திற்கு முன், முஹமட் ஐதிலும் அவரது உறவினரும், இறால் குளத்தின் அருகேயுள்ள, கொட்டகைக்கு அடியில் விளையாடுவதை தான் பார்த்ததாகவும். திடீரென இருவரையும் காணவில்லை என மனைவி கூறியதாகவும் ,” முஹமட் ஐதிலின் தந்தை முகமட் அலி கூறினார்.

இறால் குளத்தின் உள்ளே இருந்த வலையை மேலே இழுத்தபோதுதான் சிறுவர்கள் இருவரும் வலையில் சிக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக முகமட் அலி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் கோத்தா கோலா மூடாவில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவ அதிகாரி அவர்கள் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

கோலா மூடா மாவட்ட காவல்துறறி தலைவர் துணை ஆணையர் ஜைதி சே ஹாசனை தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்து தங்களுக்கு ஒரு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here