ஜெபாக் இடைத்தேர்தல்: 128 தேர்தல் பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி

கூச்சிங்:

ஜெபாக் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நேற்று வரை மொத்தம் 128 அனுமதிகளை காவல்துறை வழங்ககியுள்ளது.

அதே நேரத்தில், இடைத்தேர்தல் தொடர்பான ஐந்து புகார்கள் மட்டுமே குறித்த பிரச்சார காலத்தில் காவல்துறைக்கு கிடைத்தது என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்காக, 14 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 624 காவல்துறை பணியாளர்களும், வாக்கு எண்ணும் பணியில் 595 காவல்துறை பணியாளர்களும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் இன்று மாநில காவல்துறை தலைமையகத்தில் (IPK) நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here