கோலாலம்பூர்:
வாகனத் திருட்டுக்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் காதல் ஜோடி ஒன்றை அம்பாங் போலீசார் நேற்றுக் கைது செய்தனர்.
62 வயதுடைய ஒரு ஒப்பந்ததாரர், கடந்த 09/10/2023 அன்று, சுமார் 2 மணி அளவில், ஜாலான் பூங்கா மலூர் 12, தாமான் மூடா, 68000 அம்பாங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட அவரது வேன் காணாமல்போனது தொடர்பில் செய்த புகாரின் அடிப்படையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் முஹமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
37 மற்றும் 32 வயதுடைய ஒரு இந்திய ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் செராஸில் கைது செய்யப்பட்ட தாகவும், முதல் சந்தேக நபரிடம் 19 முந்தைய குற்றவியல் பதிவுகள் மற்றும் 11 போதைப்பொருள் பதிவுகளும் உள்ளன. அதேநேரத்தில் இரண் டாவது சந்தேகநப ருக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் எதுவும் இல்லை.
முதல் சந்தேகநபரின் சிறுநீர் பரிசோதனையில் ஆம்பெடமைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் இருப்பது சாதகமாக இருந்தது. இரண்டாவது சந்தேக நபருக்கு மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தக் கைதினைத் தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் 1 வேன் 1, 5 கார், மொபைல் போன்கள், 1 ஐபேட், 4 ஸ்பேனர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் சந்தேக நபர் அம்பாங் மாவட்டம் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேன்களை தீவிரமாகத் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் 4 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.