பெட்டாலிங் ஜெயா:
நேற்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், கோத்தா டாமான்சாரா அப்டவுனில் இரண்டு டஜன் கணக்கான கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகின.
இரவு 8.34 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து, சுங்கை பூலோ, கோத்தா அங்கேரிக், டாமான்சாரா மற்றும் பெட்டாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து மூன்று இயந்திரங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில துணை இயக்குனரான அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
இரவு 9.06 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும், இந்த தீ விபத்தில் சுமார் 20 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், மொத்த இழப்பு மற்றும் தீ விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.