கோத்தா பாரு :
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 799 குடும்பங்களைச் சேர்ந்த 2,632 பேராக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று இரவு 556 குடும்பங்களைச் சேர்ந்த 1,741 பேராக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது கோத்தா பாரு, பாசீர் மாஸ், பாச்சோக், தானா மேரா ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் 14 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் சமூக நலத் துறை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.