ஜோகூர் பாரு:
போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46, மற்றும் சாய் சூன் ஃபூ, 54, ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் ஆர். சாலினியின் முன் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்கள் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர்.
இருப்பினும், ஏனைய இரண்டு மியன்மார் ஆண்களான – வின் மின் ஹ்லியாங், 30, மற்றும் காங் மியாட் ஃபியோ, 26 – அகியோருக்கு மலாய், ஆங்கிலம் அல்லது மாண்டரின் மொழி புரியாததால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படவில்லை.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, அவர்கள் 22.5 கிலோ மெத்திலினெடிஆக்சி-மெத்தாம்பேட்டமைன் (MDMA) பவுடர், 368 கிராம் MDMA மாத்திரைகள் (MDMA எக்ஸ்டஸி மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகிறது) மற்றும் மேலும் 673 கிராம் MDMA பவுடர் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் பாசீர் கூடாங்கின் தாமான் பாசீபூத்தேயில் உள்ள ஜாலான் சாகாய் 6 இல் உள்ள ஒரு வளாகத்தில் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதே சட்டத்தின் 39B(2) பிரிவின் கீழ் தண்டனைக்குரியது, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை 15 தடவைகளுக்குக் குறையாமல் வழங்க வழி செய்கிறது.
இரண்டு மியன்மார் ஆண்களுக்கான வேதியியலாளர் அறிக்கை மற்றும் மொழி பெயர்ப்பாளருக்காக நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், ஜனவரி 23 ஐ வழக்கின் அடுத்த செவிமெடுப்பிற்காக நிர்ணயித்தது.