நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்றது ஜேடிதி அணி

பெட்டாலிங் ஜெயா:

புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் நடைபெற்ற மலேசியக் கிண்ண இறுதியாட்டத்தில் திரெங்கானு   எப்.சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு வெற்றியா ளரான ஜேடிதி மலேசியக் கிண்ணத்தைத் தற்காத்துக் கொண்டது.

ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் ஜேடிதி அணிக்காக பெர்க்சன் டா சில்வா முதல் கோலைப் புகுத்தினார். 21-ஆவது நிமிடத்தில் திரெங்கானு அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இவான் மாமுட்டி கோல் அடித்தார். இந்நிலையில் ஆட்டம் 1-1 சமநிலை கண்டது.

ஆட்டத்தின் 73-ஆவது முகமது பெரோஸ் பஹாருடின் ஜேடிதி அணிக்கான இரண் டாவது கோலைப் புகுத்தினார்.கூடுதல் நேரத்தில் தேடிதி அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அரிஃப் அய்மான் முகமது ஹனாபி கோலாக்கினார்.

இறுதியில் ஆட்டம் 3-1 கோல் கணக்கில் ஜேடிதி அணிக்குச் சாதகமாக முடிவுற்றது. ஜேடிதி நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்றுள்ளது.

சும்பாங்சிக் கிண்ணம், எப்.ஏ கிண்ணம், சூப்பர் லீக் கிண்ணம், மலேசியக் கிண்ணம் போன்ற அனைத்துக் கிண்ணங்களை இரண்டாவது ஆண்டாக வென்ற முதல் அணி யாக ஜேடிதி வரலாறு படைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here