குவா மூசாங்:
கோலா பெத்திஸில் உள்ள மாத்தாவ் பாலக் பகுதியில் நேற்று, மரக்கட்டை விழுந்ததில் இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை 10.15 மணியளவில், பாதிக்கப்பட்ட டியான் ஹெர்மவான், 32, என்பவர் எக்ஸ்காவேட்டரில் ஓய்வெடுக்கும் போது, மரக்கட்டை விழுந்ததில், உடல் நசுங்கி இறந்து கிடந்தார் என்று, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.
“இந்த சம்பவத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், இவ்வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.