ஷோரூமில் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து எரிந்த மின்சார கார்!

ஜோகூர் பாரு:

ஜோகூரிலுள்ள ஒரு கார் ஷோரூமில் நேற்று (டிச. 31) சார்ஜ் செய்யும் போது மின்சார கார் (EV) ஒன்று தீப்பிடித்தது.

சம்பவம் தொடர்பில் நேற்று மதியம் 2.45 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக 10 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், தீயணைப்பு நடவடிக்கை தளபதியும், மூத்த தீயணைப்பு அதிகாரி IIமான அஸ்மு ஜோஹர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்தபோது Mercedes EQB ரக கார் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தினால் குறித்த கார் 90 விழுக்காடும், ஷோரூமின் 5 விழுக்காடும், EV சார்ஜிங் பே 20 விழுக்காடும் சேதமடைந்தன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் உண்மையான மதிப்பிடப்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளதாக்க அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here