அதிகாலை 4 மணி நிலவரப்படி ஜோகூரில் 1,481 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 1,024 பேராக இருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவடடத்தைச் சேர்ந்த அனைவரும் அங்குள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையத்தால் நாடு தழுவிய அளவில் வெளியிடப்பட்ட சமீபத்திய பேரிடர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 13 நிவாரண மையங்களில் முறையே மிக கோத்தா பாருவிலுள்ள 6 நிவாரண மையங்களில் 180 குடும்பங்களை சேர்ந்த 720 பேரும், அதனைத் தொடர்ந்து ஜோகூர் பாருவிலுள்ள 4 நிவாரண மையங்களில் 111 குடும்பங்களை சேர்ந்த 420 பேர் தங்கியுள்ளனர். மேலும் மெர்சிங்கிலுள்ள 2 நிவாரண மையங்களில் 71 குடும்பங்களை சேர்ந்த 271 பேர், குளுவாங்கிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 23 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் தங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here