JUPEM ஊழியர் ஒருவர் காரில் இறந்து கிடக்க கண்டெடுப்பு

கோத்தா பாரு:

குபாங் கெரியானுக்கு அருகிலுள்ள வகாஃப் ஸ்டானில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே, ஆய்வு மற்றும் வரைபடவியல் (JUPEM) துறையின் ஊழியர் ஒருவர் நேற்று தனது காரில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார் .

ஹோண்டா சிட்டி காரில் நேற்று மதியம் 12.30 மணியளவில் சுயநினைவின்றி ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று, கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்லி தாவூட் கூறினார்.

“48 வயதுடைய பாதிக்கப்பட்டவர் காலை உணவுக்காக அந்த இடத்திற்கு வந்திருந்ததார் என ஆரம்ப கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்த சம்பவத்திற்கும் குற்றவியல் கூறுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று போலீஸ் நம்புவதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இறந்தவரின் காரை சோதனையிட்டதில், குற்றச் செயல்கள் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன என்றும் வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here