கோலாலம்பூர்:
பங்சாரிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உணவக ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
இன்று (மார்ச் 6) காலை 11.44 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி வான் முகமட் ஷாரிர் அசிசி வான் சைட் தெரிவித்தார்.
“சம்பவம் தொடர்பில் அழைப்பைப் பெற்றதும் , நான்கு தீயணைப்பு இயந்திரங்கள், ஒரு தண்ணீர் டேங்கர், ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனம் மற்றும் மூன்று அதிவேக மோட்டார் சைக்கிள்கள், 44 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
பந்தாய், செபூத்தே, ஜலான் ஹாங் துவா மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் நிலையங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த 45 வயது வெளிநாட்டுத் தொழிலாளியின் உடலில் 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டதையடுத்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, பந்தாய் தீயணைப்பு நிலையத் தலைவர் வான் முஹமட் ஷாஹரீர் அஜிஜி தெரிவித்தார்.
“இவ்விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்று கூறிய அவர், தீ சமையலறையில் தொடங்கியதாக நம்பப்படுகிறது என்றும், குறித்த சமையலறை 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக சேதமடைந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
மதியம் 12.40 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.