100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி., திருமண பரிசை பணிவோடு வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானி

ஆசியாவிலேயே பெரும் பணக்காரர், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக வயதான பெண்மணியொருவர் 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், எந்தவித பெருமையும் காட்டிக் கொள்ளாமல், பாட்டியின் திருமணப் பரிசை கௌரவமாக ஏற்றுக்கொண்ட ஆனந்த் அம்பானிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழா உலவுலகைன் யாரும் நினைத்துப்பார்க்காத அளவிற்கு பெரும் பொருட்ச்செலவில் ஆடம்பரமாக நடந்தது.

இந்த விழாவில் இந்தியாவின் பெரும்பாலான பிரபலங்கள் மற்றும் உலகின் பல பணக்காரர்கள் வந்து பங்கேற்றனர். அதேநேரம், இந்த விழாவிற்கு முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள தனது கிராமத்தில் உள்ள அனைத்து பொது மக்களையும் அழைத்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து விருந்தினர்களும் தங்கள் தகுதிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கினர். அந்த வகையில், இவ்விழாவிற்கு வந்திருந்த பாட்டி ஒருவர் மேடைக்கு வந்து ஆனந்த் அம்பானி, ராதிகா தம்பதிகளை ஆசிர்வதித்தார்.

அப்போது, ​​ராதிகாவை பூங்கொத்து கொடுத்தும், அவருக்கு அருகில் நின்ற கோடீஸ்வரர் ஆனந்து அம்பானிக்கு 100 ரூபாய் தாளை பரிசாக வழங்கியும், தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார். இந்த நேரத்தில், ஆனந்த் தான் பணக்காரன் என்று எந்தப் பெருமையும் காட்டாமல் சிரித்துக்கொண்டே மரியாதையாக அந்த பணத்தை வாங்கினார். இங்கு ஆனந்த் கோடீஸ்வரராக இருந்தாலும், தங்களால் முடிந்த தொகையை மோய்யாக கொடுத்த அந்த பாட்டியையும், அந்த பணத்தை துட்சமாக நினைக்காமல் பணிவுடன் வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானியையும் நெட்டிசன்கள் வாழ்த்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here