ஓம் என்பதன் அர்த்தம்

ஓம் என்ற சொல்லை நன்கு கவனித்து பார்த்தால் மிக துல்லியமாக எழுந்தப்பட்ட மந்திரம் என்பது புரியும். இது முழுமையின் வடிவமான மந்திரமாகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இது போன்ற ஒலி கிடையாது. ஓம் என்ற மந்திரத்தின் ஓ என்ற உச்சரிப்பின் ஆரம்ப ஒலியான தொண்டையின் பின்புறத்தில் இருந்தும், அடுத்த ஒலி குரல் வளையின் நடுவில் இருந்தும், ம் என்ற நாசியின் அடி நாதத்தில் இருந்து வருகிறது.

* ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதாலும், தியானிப்பதாலும் பாசிடிவ் அதிர்வலைகள் ஏற்படுகிறது.

* இது நம்மை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்குகிறது. இந்த மந்திரத்தை ஒருவர் மட்டும் உச்சரித்தால் கூட சுற்றி இருக்கும் அனைவரையும் உச்சரிக்க வைத்து விடும்.

* நம்முடைய மனம் மற்றும் உணர்வுகள் இடையே சமநிலையை ஏற்படுத்தி, அதிர்வலைகளைகளால் ஆற்றலை அதிகரிக்க வைக்கிறது.

* ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் ஆரா தூய்மை ஆகிறது.

* ஓம் மந்திர ஜெபத்தால் கிடைக்கும் ஆற்றல் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

* ஒருவரின் ஆன்மிக பலத்தை அதிகரிக்க செய்வதுடன், உயர்ந்த சக்தியான கடவுளுடன் ஒரு தொடர்பையும் ஏற்படுத்துகிறது.

* ஓம் மந்திரத்தை ஜெபம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, ஆரோக்கியமாக வும், இளமையாகவும் உணரச் செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here