ம.இ.கா தலைவராக விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியின்றி தேர்வு

எஸ்.வெங்கடேஷ்

கோலாலம்பூர்:

ம.இ.கா தேசியத் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.

நேற்று கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடத்தப்பட்ட நிலையில் விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

3,014 கிளைகளின் ஆதரவு பெற்று விக்னேஸ்வரன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என இத்தேர்தல் குழு தலைவரான கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த தேர்தல் குழுவில் கட்சியின் உதவித்தலைவர்களான டத்தோ தி.மோகன் டத்தோ தோ.முருகையா, டத்தோ எம்.அசோகன், டத்தோ கோகிலன் பிள்ளை உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here