ஜோகூர் பாரு:
இன்று மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்துவிட்டு, ஆடவர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பான அறிக்கை காலை 8.45 மணிக்கு கிடைத்ததாக,
தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
29 வயதான உள்ளூர் நபர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார் சைக்கிள் பாதையில் இறந்து கிடந்தார் என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.