கோலாலம்பூரில் இருந்து தோஹா சென்ற விமானத்தில் சென்ற மலேசிய பயணி மாரடைப்பால் மரணம்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் இருந்து கட்டாரின் தோஹா நோக்கி 254 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, மலேசியாவைச் சேர்ந்த ரேமண்ட் செல்வராஜ் (54) என்பவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடவர் தனது குடும்பத்தினர் மூன்று பேருடன் குறித்த விமானத்தில் பயணித்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, ரேமண்ட் செல்வராஜ் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக விமான பணிப்பெண்களிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்தவுடன், தலைமை விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளார்.

விமானம் அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்ததால், அருகிலிருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆனால், பயணி ரேமண்ட் செல்வராஜ் தனது இருக்கையில் உயிரிழந்த நிலையில் அமர்ந்திருந்தார்.

இதை அடுத்து, அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அங்குவந்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here