சுங்கை பூலோ:
நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு போலீஸ்காரர் என உறுதிப்படுத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் பேராக்கில் பணி புரியும் காவலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரது உடல் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஏற்கனவே சிதைவடையத் தொடங்கியிருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 302 இன் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்று அவர் சொன்னார்.




















