* எப்போதும் சிரித்த முகத்துடன், அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
* அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், சத்துள்ள பானங்கள் ஆகியவற்றை குடிக்க வேண்டும்.
* ஒருவேளை பசி எடுத்தால் குறைந்த அளவிலாவது உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பசியுடன் இருந்து பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது.
* வறுத்த உணவுகளுக்கு பதிலாக ஆவியில் வேக வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
* எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையிலான உணவுகளை எடுத்துக் கொள்வதும், சத்தான பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.
* நவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிலக்கான பெண்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள், நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நவராத்திரி விரதம் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
* வீட்டில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் நவராத்திரி விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* உறவினர்கள் யாராவது இறந்து இருந்தால் இந்த ஆண்டு விரதம் இருப்பதை தவிர்த்து விட்டு, அடுத்த ஆண்டு விரதம் அனுஷ்டிக்கலாம். நவராத்திரி காலத்தில் உறவினர்கள் யாராவது இறந்தால் மீண்டும் உறவினர் வழியில் ஏதாவது குழந்தை பிறப்பு நிகழ்ந்த பிறகே நவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முடி வெட்டுவது, நகர் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
* கலசம் வைத்து வழிபட்டால் அதை அடிக்கடி இடம் மாற்றி வைக்கக் கூடாது.
* நவராத்திரி காலத்தில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
* அசைவ உணவுகள், எண்ணெய்யின் பொறித்த உணவுகள், மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
நவராத்திரி காலத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு குங்குமம், வெற்றிலை,பாக்கு கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் ரவிக்கை துணி, புடவை, வளையல் போன்ற மங்கள பொருட்கள் வைத்துக் கொடுக்கலாம். ஆனால் யாரையும் வெறும் கையுடன் அனுப்பக் கூடாது. வயதான சுமங்கலிப் பெண்கள், 8 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் வந்தால் அவர்களை அமர வைத்து, நழுங்கு வைத்து, மங்கல பொருட்கள் கொடுக்க வேண்டும். வயதில் மூத்த சுமங்கலியாக இருந்தால் அவர்களிடம் ஆசி பெறலாம். குழந்தைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உடை, புத்தகம், பேனா போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த இனிப்புகளை சாப்பிட கொடுக்கலாம்.











