மாரான்:
மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்து முழு சாலையையும் அடைத்ததால், அப்பாதையில் கடும்போக்குவாரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சாலைப்பயனர்கள் அப்பாதையை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து காலை 6.45 மணியளவில் Sekolah Menengah Kebangsaan மாரான் 2க்கு முன்னால் நிகழ்ந்தது என்றும் , டிரெய்லரை அகற்றும் நடவடிக்கைக்காக குவாந்தான் செல்லும் சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் வோங் கிம் வை தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், டிரெய்லர் மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





















