KL மற்றும் சிலாங்கூரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது

கோலாலம்பூர்:

குடிநுழைவுத் துறை (JIM) நேற்று இரண்டு தனித்தனி இடங்களில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், வெளிநாட்டுப் பெண்களை உள்ளடக்கிய ஒரு விபச்சார கும்பலை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இரண்டு உள்ளூர் ஆண்கள் உட்பட மொத்தம் 16 பேரும் 19 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்கள் கோலாலம்பூரில் உள்ள பாண்டடான் பெர்டானா மற்றும் சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ கெம்பங்கான் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக JIM துணை இயக்குநர் ஜெனரல் (மேலாண்மை) இஸ்மாயில் மொக்தார் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள குடிவரவுத் துறை தலைமையகத்தின் உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் குழுவை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை நேற்றிரவு 7.15 மணிக்கு தொடங்கியதாக அவர் மேலும் கூறினார்.

இரண்டு வாரங்களாக சேகரிக்கப்பட்ட பொதுத் தகவல் மற்றும் புலனாய்வு அடிப்படையில், வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை அடையாளம் காணும் இந்த நடவடிக்ககையில், வளாகத்தின் பராமரிப்பாளர்கள் என்று நம்பப்படும் இரண்டு மலேசிய ஆண்களை வெற்றிகரமாகக் கைது செய்தது.

மேலும் “இரண்டு வியட்நாமிய ஆண்கள், ஏழு வியட்நாமிய பெண்கள், நான்கு இந்தோனேசிய பெண்கள் மற்றும் ஒரு லாவோஷியப் பெண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் கூறினார்.

ஆரம்பகட்ட சோதனைகளில் ஒரு வியட்நாமியப் பெண்ணும் ஒரு லாவோஸ் பெண்ணும் செல்லுபடியாகும் சமூக வருகை அட்டைகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டது என்றும், இரண்டு வியட்நாமிய ஆண்கள் நாட்டில் தங்கியிருப்பதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது பாஸ்கள் எதுவும் இல்லை என்றும் இஸ்மாயில் கூறினார்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றை மீறியதாக சந்தேகிக்கப்படும் அனைத்து வெளிநாட்டினரும் புத்ராஜெயா குடிநுழைவு டிப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here