தானா மேராவில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மகனைக் காப்பாற்றிய தந்தை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கோத்தா பாரு:

நேற்று அதிகாலை தானா மேராவில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தனது எட்டு வயது மகனை வீரத்துடன் மீட்ட தந்தை, நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜாலான் கம்போங் சாட்டில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் தனது பிள்ளையுடன் புடின் என்ற 46 வயது பாதிக்கப்பட்டவர் நடந்து சென்றபோது, அவரது மகன் தவறுதலான ஆற்றில் விழுந்தார். தனது மகனை நீரில் மூழ்காது வெற்றிகரமாகக் அவர் காப்பாற்றிய போதிலும், ஆற்றின் பலத்த நீரோட்டங்கள் குறித்த ஆடவரை இழுத்துச் சென்றன என்று, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி ரோஸ்லான் இஸ்மாயில் கூறினார்.

மாலை 7.26 மணிக்கு மெர்ஸ் 999 மூலம் அவசர அழைப்பு அதிகாரிகளை அடைந்தது, உடனடியாக மீட்புக் குழுக்கள் 3.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு அனுப்பப்பட்டன என்றும், மீட்புப் பணியாளர்கள் மாலை 7.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக தேடல் நடவடிக்கைகளுக்கு நீர் மீட்புக் குழுவின் உதவியைக் கோரினர்.

காணாமல் போன தந்தையைக் கண்டுபிடிக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடர்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here