அரசாங்கம் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும், இலக்கிடப்பட்ட மானியங்களைத் தொடர்வதிலும் கவனம் செலுத்துகிறது!

கோலாலம்பூர்:

அடிப்படை வசதிகளான, பள்ளிகள், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, நிதிநிலைமையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் (Datuk Seri Amir Hamzah Azizan), நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனைவருக்கும் பொதுவான மானியங்கள் வழங்கப்படுவதற்கு பதிலாக, இலக்கிடப்பட்ட மானியங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு உதாரணமாக, ஜூலை 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண மானியத்தைக் அவர் குறிப்பிட்டார்.

இது, 85% மலேசியர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில், M40 குழுவினரின் கட்டணங்களை, 14% வரை குறைத்துள்ளது.

குடும்பங்களுக்கான இலக்கிடப்பட்ட மானிய முறை கடினமானது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அந்த முறையை உடனடியாக அமல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

இருப்பினும், வாழ்க்கைச் செலவினங்களை குறைக்க, இதர இலக்கிடப்பட்ட மானியங்கள், உதவிகளைத் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here