மவுண்ட் அஸ்டின் பகுதியில் இரட்டை மரணம்: காதல் தகராறால் கொலை-தற்கொலை என சந்தேகம்

ஜோகூர் பாரு:

உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்குப் பெயர் பெற்ற மவுண்ட் அஸ்டின் பகுதியில், இரண்டு மியான்மர் நாட்டு நபர்கள் மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (அக்டோபர் 20) இரவு இடம்பெற்றது.

சம்பவம் இரவு 7.40 மணியளவில் ஜலான் ஹைட்ஸ் 8/3 என்ற முகவரியில், ஊழியர்கள் தங்கும் இடத்தில் நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்ட் கமிஷனர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

மரணமடைந்தவர்களில் ஒருவர், 33 வயது மாதின், கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை தாக்கியதாக நம்பப்படும் மியான்மர் நாட்டு ஆண், 24 சென்டிமீட்டர் நீளக் கத்தியுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அந்த நபர், மாதின் காதலர் என்று நம்பப்படுகின்றார். ஆரம்ப விசாரணையில், காதல் தகராறு காரணமாக மாதினை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தைத் தடுக்க முயன்ற 23 வயது வெளிநாட்டு பெண் மற்றும் 27 வயது மலேசிய ஆண் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொலையின் சரியான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here